வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி

a Rafflecopter giveaway

Saturday, April 28, 2012

இலங்கையில் பாணின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி


 
 
(google மூலம் வாருபாவர்களே சேர்த்துக் கொல்லப்படுவீர்கள். ( எனவே google க்கு சென்று naladakkam.blogspot.com என type செய்து வரவும்)

1 ஆம் பரிசு : 500 ரூபாய் பெறுமதியான ரீலோட்

2 ஆம் பரிசு: 250 ரூபாய் பெறுமதியான ரீலோட்
3 ஆம் பரிசு:150 ரூபாய் பெறுமதியான ரீலோட்
4 ஆம் பரிசு: வெற்றிப்பாதை தளத்தில் ஒரு மாத விளம்பரம்.

விதிமுறை.
1/ google மூலம் வாருபாவர்களே சேர்த்துக் கொல்லப்படுவீர்கள். ( எனவே google க்கு சென்று naladakkam.blogspot.com என type செய்து வரவும்)
2/ அனைவரும் பங்கு கொள்ளலாம்.
3/ நடுவர்களின் முடிவே இறுதியானது.
4/ வெற்றியாளர்கள் இந்த தளத்தில் அறிவிக்கப்படுவார்கள்.

போட்டி முடிவுத் திகதி: 06/18/2012

புத்தம் புது அம்சங்களுடன் பேஸ்புக்கின் மெஸெஞ்சர்

தற்போது பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கென அதன் புதிய மேம்படுத்தப்பட்ட மெஸெஞ்சர் வெளிவந்துள்ளது. இனிமேல் இப்புதிய பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் ஏனைய மெஸெஞ்சர்களைப் போலவே டெஸ்க்டொப்பில் இருந்தபடி அரட்டை அடிக்கலாம்.

உலாவியைத் திறந்து லொகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மேலும் பேஸ்புக் அப்டேட்கள் நியூஸ் பீட்ஸ்களாக மெஸெஞ்சரின் மேலே காட்டப்படும். இதில் குழுவினருடன் இணைந்து அரட்டை அடிப்பதற்கான வசதியும் உள்ளது. மேலும் கணணியில் மட்டுமன்றி மொபைல்களிலும் சாட்டிங்கை தொடரலாம்.

Facebook Messanger 

உலகின் மிகச்சிறிய கோழி முட்டை.? (படங்கள் இணைப்பு)

கோழி ஒன்று வெறும் 2 சென்டி மீ்ற்றர்கள் அளவில் இட்ட முட்டையானது மிகச்சிறிய முட்டை என்ற சாதனைக்கு சொந்தமாகியுள்ளது. 7.3 கிராம்களை கொண்ட இந்த முட்டை ஐந்து ரூபா நாணயத்தை விட சற்றே பெரிதாகக் காணப்படுகின்றது. இம் முட்டையயை உலகசாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பெறச் செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன..



மெய்சிலிர்க்கும் அனகோண்டா வேட்டை! (வீடியோ தமிழ் மொழியில்)

உலகிலயே மிகப்பெரிய பாம்பு என கருதப்படுவது அனகோண்டா இன பாம்புகள் என்பது யாவரும் அறிந்த விடயமே. இவ்வகை பாம்புகள் மனிதனை மட்டுமல்ல தன்னை விட உருவத்தில் விசாலமாக விலங்குகளையும் முழுமையாக விழுங்கக்கூடிய வல்லமை படைத்தவை.


 இராட்சத முதயைலை கூடி எளிதாக விழுங்கி விடும் இந்த அனகொண்டா பாம்புகள். இவ்வாறான அனகொண்டா வேட்டைக்காக புறப்பட்டது ஒரு குழு. இந்த குழுவினர் அனகொண்டா பாம்புகள் செறிந்து வாழும் காடுகளில் அலைந்து அவற்றை தைரியமாக பிடித்து ஆய்வு செய்கிறார்கள்.

இது பற்றி மெய்சிலிர்க்கும் காணொளியை உங்களுக்காக நாம் வழங்குகிறோம். தமிழ் மொழியுடன் கூடிய இந்த காணொளி மூலம் நீங்கள் அதிரவைக்கும் காட்சிகளையும் அனகொண்டா பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
 http://www.puthiyaulakam.com/2012/04/blog-post_7139.html#


Friday, April 27, 2012

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத

பைல் எக்ஸ்டென்ஷன்கள்


பைல் எக்ஸ்டென்ஷன்கள் காணுதல்.


சில பைல்கள் நாம் பார்க்கையில்

 அது எந்த வகையானது   

அது எதில் ஓப்பன் ஆகும் என

 குழம்பிபோவோம். அதுபோன்ற சந்தர்பங்களில்

அந்த பைல் எந்த வகையை சார்ந்தது

 அதை எதில் சென்று ஓப்பன்

 செய்யலாம் என இந்த சாப்ட்வேர்

 தொகுப்பு உதவும்.

 ஆன்லைனிலும் நாம் பைல் சர்ச்

 மூலம் பைல் எக்ஸ்டென்ஷனை

 காணலாம்.மேலும் எந்த Programe

 மூலம் அதை ஓப்பன்

செய்யலாம் என விவரத்தையும்

 நமக்கு தெரிவிக்கும்.


    சில பைல் வகைகள் தொகுப்பு.  கீழே

நமது கம்யூட்டரில் விண்வெளி






குழந்தைகளுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள்

.அவர்களுக்கு விளையாட்டாகவும் இருக்கனும்

அறிவும் வளர உபயோகமான சாப்ட்வேர் இது.

அவர்களுடன் நீங்களும் விண்வெளியை கண்டு களிக்கலாம்.


வானத்தில் உள்ள நட்சத்திரங்கள். கோள்கள் போன்றவற்றை இந்த

சாப்ட்வேர் மூலம் கண்டு மகிழலாம். Open source software ஆன இதை பயன்படுத்தி

கோள்கள்,விண்மீன்களை நமது கம்யூட்டரில் வரவழைக்கலாம்.


இந்த சாப்ட்வேரில் novigation>go to optect என்ற மெனுவை கிளிக் செய்தால்

கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நீங்க காண விரும்பும் கோளின் பெயரை டைப்

செய்து goto என்ற பட்டனை அழுத்துங்கள். நீங்கள் விரும்பிள கோள் திரையில்

தெரியும். அதை சிறிதாக்கலாம்,சுழற்றலாம், பெரியதாக்கி பார்க்கலாம். அதைப்போல்

விண்வெளி ஓடத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு சென்று அவற்றை

பார்ககலாம்.

முகவரி தளம்:- http://www.shatters.net
 
 
 

Thursday, April 26, 2012

குழந்தைகள் குதுகலமாக வரைந்துமகிழ

விடுமுறை விட ஆரம்பித்துவிட்டார்கள். குட்டி குழந்தைகள் இனி வீட்டில் சும்மா இருக்கமாட்டார்கள்.விதவிதமாக சுவரில் படங்களை வரைந்துவைப்பார்கள்.அவர்கள் சுவரில் விதவிதமாக படங்களை வரையாமல் கணிணியில் வரைய இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் புக் என்னும் டேபை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள படத்தை தேர்வு செய்து அருகில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.

அழகிய மலர்களின் வால்பேப்பர்கள்.

ஆயிரம் மலர்களே ....மலருங்கள் என பழைய பாடல் உள்ளது. மலர் கண்காட்சி ஊட்டியில் பிரபலம். நாம் செலவு செய்து அங்கு சென்று பார்க்காமல் நமது கம்யூட்டரிலேயே விதவிதமான மலர்களை டெக்ஸ்டாப்பாக வைத்துக்கொள்ளலாம். சுமார் 100 மலர்களின் புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.தினம் ஒரு மலராக நாம் டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளலலாம்.. 28 எம்.பி.கெர்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு விதவிதமான மலர்கள் கிடைக்கும். 
விதவிதமான மலர்களின் சில புகைப்படங்கள் கீழே:-

3டி சொக்லேட் தயாரிக்கும் முறை



பொதுவாக சொக்லேட் என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகையாகும்.இவ்வாறான சொக்லேட் பல வடிவத்தில் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வடிவத்தினைக் காணும்போது மிகவும் அழகாகவும், கலைநயத்துடன் கூடியதாகும் காணப்படும்.
இங்கு காணப்படும் 3டி சொக்லேட் தயாரிக்கும் முறையைக் காணொளியில் காணலாம்.

தம்புள்ளை விவகாரம்: நிந்தவூரில் எதிர்ப்புப் பேரணி


  தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறிடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒன்றியம் எதிர்ப்புப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இப்பேரணியில் பல இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டும் வருகின்றது.

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது



இலங்கை நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றுப் பாரம்பரியத்துடன், நாட்டின் இறைமையைக் காப்பதிலும் தாய் நாட்டிற்கு நம்பிக்கையானவர்களாகவும் சக இனத்தவர்களோடு சகோதர வாஞ்சையோடும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

புற்றுநோயை தடுக்கும் பீசா: ஆய்வில் தகவல்





பீசாவை அதிக அளவு சாப்பிட்டால் பெருஞ்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இங்கிலாந்தின் லாங் ஐலேண்டு பல்கலைகழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கர் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணப்படுத்துவதை கண்டறிந்தனர். மேலும் பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.
இது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது என பேராசிரியர் சுப்ரியா தெரிவித்துள்ளார்.
 http://www.lankasri.com/ta/link-3m4340SdUgb6eE4cQ373.html

தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

தம்புள்ளயில் அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது சிங்கள பௌத்த தேரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று (26) நிர்வாக முடக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.
வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ் வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை செயற்படுத்தவில்லை.
பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. நகர் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Followers